பட்டைத்தூள் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் போதும்: இந்த நோய்கள் வராது...
பட்டைத்தூள் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் போதும்:
இந்த நோய்கள் வராது
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன்
பட்டைத்தூள் மற்றும் தேன் கலந்து தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் பல நோய்களின்
பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
நன்மைகள்:
Ø இதயத்தின் தசைகள் வலிமையாகி, கொலஸ்ட்ராலைக் குறைத்து
மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
Ø மூட்டு நோய் உள்ளவர்கள் காலை மற்றும் மாலையில் பட்டைப்பொடி
மற்றும் தேன் கலந்த நீரை குடிப்பதால் மூட்டு நோய் விரைவில் குணமாகும்.
Ø ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேன், 3 டீஸ்பூன் இலவங்கப்
பட்டை பொடியும் கலந்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
Ø தேனை சுடு நீரில் கலந்து வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப்
பொடியை சேர்த்து 3 நாளைக்கு சாப்பிட்டு வர கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ்
தொல்லைகள், வயிற்று வலி, அல்சர் போன்றவை நீங்கும்.
Ø 1 ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை ஒரு கப் நீரில் கொதிக்க
வைத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் சரும சுருக்கங்கள் வருவதை
தடுக்கும்.
Ø தினசரி தேனையும், இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிட்டு
வந்தால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல நோய்களின் தாக்கம் குறையும்.
Ø 2 ஸ்பூன் தேனை பட்டைத்தூளுடன் சேர்த்து சாப்பிட்டு வர
அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
Ø 3 ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை
கலந்து அதை காலை உணவிற்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலில் உள்ள
அதிகப்படியான கொழுப்புகள் கரைந்துவிடும்.
Ø தேன் மற்றும் பட்டை கலந்த கலவை இன்சுலின் சுரப்பை
கட்டுப்படுத்தி, உடலில் குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது.
Post a Comment