ஒரே வாரத்தில் கருகருவென அடர்த்தியாக முடி வளர



முடி உதிர்தல் பிரச்சனை இல்லாத ஆட்களே இருக்கமுடியாது. பருவநிலை மாற்றத்தின் போது,  ஷாம்பு மாற்றும்போது, தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தால், தூசி, மாசுக்கள் ஆகிய பல்வேறு காரணங்கள் முடி உதிர்தலுக்கு இருக்கின்றன.
தலைமுடி வளரும் என்று சொல்லி விற்கப்படுகின்ற எண்ணெய் அல்லது ஷாம்பூ வாங்கி பயன்படுத்தி மீண்டும் ஏமாந்து போகிறோம். ஆனால், நாம் செய்யவேண்டியது தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்க வேண்டியது தான். இப்போது இங்கே நாங்கள் சொல்லப்போவது எந்த மாயமோ மந்திரமோ இல்லை. தலை முடிக்கு இயற்கையான வழியில் ஊட்டமளிப்பது தான் இது.
என்ன செய்தால்? ஒரே வாரத்தில் தலைமுடி பிரச்சனை ஓய்ந்து முடி வளர ஆரம்பிக்கும் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :-
தேங்காய் எண்ணெய்
 ஆம்லா ஹேர் ஆயில்
வைட்டமின் ஈ
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதேபோல் தலைமுடியை கருப்பாகவும், பளபளப்பாகவும் ஆம்லா ஹேர் ஆயில் உதவும். விட்டமின் ஈ நம் தலை முடியை வலுவாக்கும்.
 செய்முறை:-
ஒரு சிறிய பவுலில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆண்களுக்கு என்றால் ஒரு ஸ்பூன் போதுமானது.
அதனுடன் சம அளவுஆம்லா ஆயிலை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன்பின் ஒரு விட்டமின் ஈ கேப்சூலை உடைத்து அந்த ஜெல்லையும் அதில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் ஸ்பூனால் 15 வினாடிகள் வரை நன்கு கலக்கிவிட்டு, அதை தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் தேய்த்து பத்து விரல்களையும் கொண்டு நன்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு, அப்படியே இரவு முழுக்க தலையில் எண்ணையில் வைத்திருந்து காலை எழுந்த உடன் தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியில் அலச வேண்டும்.
இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்யவேண்டும். தொடர்ந்து இதை மூன்று மாதங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் வாய்பிளக்கும் படி தாறுமாறாக முடி வளர்ந்திருக்கும்.
நீங்கள் பயன்படுத்த தொடங்கிய ஒரு வாரத்திலேயே இதன் பயனை உங்களால் உணரமுடியும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் சைனஸ்  உள்ளவர்கள் இந்த முறையை கவனமாக கையாளவேண்டும்.
அவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த எண்ணையைத் தேய்த்து, 10 நிமிடங்கள் மட்டும் தலையில் வைத்திருந்து, பின்பு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இதை நீங்கள் நம்பி பயன்படுத்தலாம். 100% பயன் தரக்கூடியது.

No comments